காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் அனைத்து நகராட்சிகளிலும் தலைவர் பதவிகளை ஏற்கும் திமுகவினர்

By செய்திப்பிரிவு

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதனால் அனைத்து நகராட்சிகளிலும் திமுகவினர் தலைவர் பதவிகளை வகிக்க உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர் ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன. இதில் மாங்காடு நகராட்சியில் மொத்தம் உள்ள 27 இடங்களில் திமுக கூட்டணி 16 இடங்களை பிடித்தது. இதில் திமுக-14, மதிமுக-2 வெற்றி பெற்றுள்ளன. அதிமுக-6 இடங்களிலும், சுயேச்சைகள்-5 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதேபோல் குன்றத்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 இடங்களில் திமுக கூட்டணி 24 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக-22, காங்கிரஸ்-2 வெற்றி பெற்றுள்ளன. அதிமுக-5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை ஓர் இடத்தில் வெற்றி பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இவற்றை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

செங்கல்பட்டு நகராட்சி 4-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்
யாஸ்மினுக்கு பணமாலை அணிவிக்கப்பட்டது

மதுராந்தகம் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக கூட்டணி-19,அதிமுக-2 இடங்களையும், சுயேச்சைகள்-3 இடங்களையும் பிடித்துள்ளன. நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகளில் திமுக கூட்டணி-20, அதிமுக-8, சுயேச்சைகள்-2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மறைமலை நகர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் திமுக கூட்டணி-11, அதிமுக-5, தேமுதிக-2,சுயேச்சைகள்-3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகளில் திமுக-22, அதிமுக-6, விடுதலைச் சிறுத்தைகள்-1, சுயேச்சைகள்-4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 நகராட்சிகள் உள்ளன. இதில் 21 வார்டுகளைக் கொண்ட திருத்தணி நகராட்சியில் 18-வது வார்டில்திமுக வேட்பாளர் பூ.சரஸ்வதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆகவே, மீதமுள்ள 20 வார்டுகளில் திமுக-17, அதிமுக-2, சுயேச்சை-1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

மாமல்லபுரம் பேரூராட்சியை அதிமுக கைபற் றியதை தொடர்ந்து தலைவர் வேட்பாளராக
முன்னிருத்தப்பட்டுள்ள எ.வளர்மதி எஸ்வந்ராவ் சககவுன்சிலர்களுடன் சென்று
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

திருநின்றவூர் நகராட்சியின் 27 வார்டுகளில் திமுக-15, காங்கிரஸ்-2, மதிமுக-1, அதிமுக-3, பகுஜன் சமாஜ்-3, சுயேச்சை-3 வார்டுகளை கைப்பற்றியுள்ளன.

மொத்தம் 27 வார்டுகளைக் கொண்ட திருவள்ளூர் நகராட்சியில் திமுக-14, காங்கிரஸ்-1, அதிமுக-3, பாமக-1 வார்டிலும், சுயேச்சை-8 வார்டுகளிலும் வென்றுள்ளன. திருவேற்காடு நகராட்சியின் 18 வார்டுகளில் திமுக-11, காங்கிரஸ்-1, சுயேச்சை-6 வார்டுகளை கைப்பற்றியுள்ளன.

பூந்தமல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் திமுக-12,காங்கிரஸ்-1, அதிமுக-2, சுயேச்சை-6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

பொன்னேரி நகராட்சியின் 27 வார்டுகளில் திமுக-15, அதிமுக-9,சுயேச்சை-3 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

17 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

35 mins ago

ஆன்மிகம்

46 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்