தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோரைக் கொண்டு ‘தமிழினி' வாட்ஸ்அப் குழு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வாட்ஸ்அப் குழுவின் கவுரவ ஆலோசகர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் இல்லத் திருமண விழா புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு ‘தமிழினி' வாட்ஸ்அப் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வீ.சி.சுபாஷ்காந்தி தலைமையில் 9 மாட்டு வண்டிகளில் கல்யாண சீர் கொண்டுவரப்பட்டது.
ஒவ்வொரு வண்டியிலும் திரு வள்ளுவர், ஒளவையார், இளங் கோவடிகள், கம்பர், பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி ஆகிய தமிழறிஞர்களின் படங்களுடன் அவர்களது படைப்புகளும் (புத்த கங்கள்) கொண்டு வரப்பட்டன. மண்டப வாசலில் இவற்றுடன் மா, பலா, வாழை ஆகிய முக் கனிகளையும் தட்டுகளில் வைத்து சீர்வரிசை அளிக்கப்பட்டது.
வாடஸ்அப் குழுவினரின் இந்த செயல் திருமண விழாவுக்கு வந்த அனைவரையும் வியக்க வைத்தது. மேலும், வாட்ஸ்அப் குழுவினரின் செயலை பலரும் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago