தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளம் கிராமத் தில் சுடலைமாடன் கோயில் உள்ளது. நேற்று அதிகாலை இந்த கோயிலுக்குள் புகுந்த 2 நபர்கள், உண்டியலை உடைத்து திருட முயற்சித்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற சிலர் இதனைக் கண்டு கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர். கிராம மக்கள் திரண்டு சென்றபோது ஒருவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மற்றொருவர் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்.
அந்த நபரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மயக்க மடைந்தார். கிராம மக்களே அந்த நபரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர் திருநெல் வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சியைச் சேர்ந்த கண்ணன் என்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சாத்தான்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கண்ணனை அடித்துக் கொன்றதாக பெருமாள்குளம் கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த பெருமாள்குளம் மக்கள், சாத்தான்குளம் காவல் நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago