வேட்பாளர்களின் முகவர்களை நியமிப்பதற்கான படிவத்தை விநியோகிக்கத் தொடங்கியது சென்னை மாநகராட்சி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் முகவர்களை நியமிக்க தேவையான படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநகராட்சி அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2022-ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்களுக்கான முகவர்களை நியமிக்க படிவங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இன்று (14.02.2022) முதல் பெற்றுக்கொள்ளலாம்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்–2022, பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 19.02.2022 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு பதிவாகும் வாக்குகள் 22.02.2022 அன்று எண்ணப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்களுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக 15 இடங்களில் வாக்கும் எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் தங்களின் முகவர்களை நியமிக்க படிவம் 24-ஐ சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மொத்தம் 2,670 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு வேட்பாளர் தனது வார்டிற்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேசைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மேசைக்கு ஒருவர் எனவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கு ஒருவர் எனவும் முகவர்களை நியமிக்க படிவங்களை வழங்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்."

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்