‘டாஸ்மாக் கடையை மூடச் சொல்லுங்க’: மயிலாப்பூர் பாஜக வேட்பாளரிடம் பெண் கதறல்

By செய்திப்பிரிவு

‘டாஸ்மாக் கடையை மூடச் சொல்லுங்க’ என்று மது பழக்கத்துக்கு அடிமையான கணவரை பறிகொடுத்த இளம் பெண் ஒருவர் மயிலாப் பூர் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளராக உள்ளவர் கரு.நாகராஜன். தினமும் காலை மாலை நேரங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் கரு.நாகராஜன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று முன் தினம் மாலை மயிலாப் பூர் ரோட்டரி நகர், கூவம் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு வீடாக சென்று கொண்டிருந்த அவரைக் கண்டதும், இளம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க கதறினார். என்னவென்று கேட்டபோது, “என் பெயர் வத்சலா. 26 வயதாகும் எனக்கு சில வருடங்கள் முன்பு முருகன் என்பவருடன் திருமணம் ஆனது. தீவிர குடிப்பழக்கம் கொண்ட அவர் சமீபத்தில் இறந்து விட்டார். 6-ம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. டாஸ்மாக் கடையால் அநியாயமாக 26 வயதிலேயே எனது வாழ்க்கையை தொலைத்து நிற்கிறேன். தயவு செய்து டாஸ்மாக் மதுபானக் கடையை மூட நடவடிக்கை எடுங் கள்” என்று கண்ணீர் மல்க கூறினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்