வைகோ சட்டப்பேரவைத் தேர் தலில் போட்டியிட வலியுறுத்தி, செல்போன் கோபுரத்தில் ஏறி மதிமுக பிரமுகர் போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருவண்ணா மலை மாவட்ட மதிமுக செயற் குழு உறுப்பினராக இருப்பவர் தயாளன் (45). இவர், தானிப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் நேற்று காலை திடீரென ஏறினார். பின்னர், ‘‘கோவில்பட்டியில் மீண்டும் வைகோ போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என்று மிரட்டல் விடுத்தார்.
தகவலறிந்த தானிப்பாடி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அவரை சமாதானம் செய்தனர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார்.
இதையடுத்து, திருவண்ணா மலை மாவட்ட மதிமுக மாவட்டச் செயலாளர் ஆரணி ராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர், உடனடியாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் செல்போனில் பேசியுள்ளார். சற்று நேரத்தில் தயாளனின் செல்போனை தொடர்பு கொண்ட வைகோ, கோபுரத்தில் இருந்து கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று காலை 9.30 மணியளவில் தயாளன் கீழே இறங்கினார். அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago