சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், பொதுப் பிரிவினருக்குக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, எம்.டி., எம்.எஸ்., போன்ற மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடும், 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் என கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர் பார்க்கவியான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள 969 இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது.இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது.எனவே, அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு அல்லது ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு சலுகையை மட்டும் வழங்க வேண்டுமென்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் அரசு மருத்துவர் சார்பில், ஊக்க மதிப்பெண்ணை தகுதியாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் , அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள் மற்றும் அணுக முடியாத பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவதாக வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இரண்டு சலுகைகளும் வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்க தடை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் பார்க்கவியான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய் மற்றும் சத்திக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்குக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள் 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்ததுள்ளனர். மேலும், நடப்பு கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர். இட ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தமிழக அரசு முடிவை எதிர்த்து எதிர்காலத்தில் வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் அறிவுறுத்தி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
37 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
45 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
51 mins ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago