அதிமுகவினர் 800 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி யில் அதிமுக வேட்பாளர் வி.மேகநாதன் நேற்று முன்தினம் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அச்சரப்பாக்கம் சாலையில் அமைக் கப்பட்ட தேர்தல் அலுவலத்தைத் திறந்துவைத்து, முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ், வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘தேர்தல் அலுவலகம் திறப்பதற்கு மட்டுமே அதிமுகவினர் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், அனுமதி பெறாமல் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் தொகுதிச் செயலாளர் கே.பாஸ்கர் உட்பட அதிமுகவினர் 800 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்