முதல்வர் ஜெயலலிதாவை முக்குலத் தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் சந்தித்து, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பல்வேறு சிறிய கட்சிகளும் அமைப்பு களும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று முன் தினம் சந்தித்து தங்கள் ஆதரவை தெரி வித்ததுடன், தங்கள் கட்சிக்கு வாய்ப்பு வழங்கக் கோரி மனுவும் அளித்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவை போயஸ் கார்டன் வீட்டில் நடிகர் கரு ணாஸ் நேற்று சந்தித்து, தனது முக்குலத் தோர் புலிப்படை அமைப்பின் ஆதரவை தெரிவித்தார். அவருடன் பொதுச்செய லாளர் கே.ஏ.பாண்டித்துரை, துணைத் தலைவர் எம்.சந்தனகுமார், பொருளாளர் பி.முருகன் உள்ளிட்டோரும் சென்றி ருந்தனர்.
இதுகுறித்து நிருபர்களிடம் கருணாஸ் கூறும்போது, ‘‘இந்தத் தேர்தலில் அதி முக 234 தொகுதியிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க முழு ஆதரவை அளித்துள்ளோம். இதற்காக எங்கள் அமைப்பில் உள்ள 3 லட்சம் இளைஞர்கள் பணியாற்றுவர். எங்கள் அமைப்பு மற்றும் நான் போட்டியிடுவது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார். 234 தொகுதிகளிலும் அதிமுக வெற் றிக்காக பிரச்சாரம் செய்வோம்’’ என்றார்.
அதேபோல தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.சுந்தரம் தலைமையில், சங்கத் தலைவர் எஸ்.ஏ.சின்னச்சாமி, பொரு ளாளர் கே.பி.வேலுமணி ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்து தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 min ago
க்ரைம்
10 mins ago
இந்தியா
6 mins ago
இந்தியா
36 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago