புதுச்சேரியில் இரண்டு நாட்களில் 2,684 பேருக்கு கரோனா பாதிப்பு; 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களில் 2,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதித்த 3 பேர் உயிரிழந்தனர். மொத்த பாதிப்பு 1 லட்சத்து 36 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் உதயகுமார் வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு (ஜன. 14, 15) தினங்களில் 7,511 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 2,435, காரைக்கால் - 190, ஏனாம் - 17, மாஹே - 42 என மொத்தமாக 2,684 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், காரைக்காலில் ஒருவர், மாஹேவில் 2 பேர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.38 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை மொத்தமாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 550 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதுச்சேரியை பொருத்தவரையில் ஜிப்மர் மருத்துவமனையில் 46, அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 36 என 82 பேரும், காரைக்காலில் 20 பேரும், ஏனாமில் 3 பேரும், மாஹேவில் 18 பேரும் என மொத்தமாக மருத்துவமனைகளில் 123 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,662 பேரும் என 6,785 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு நாளில் 166 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 879 (93.65 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 14 லட்சத்து 95 ஆயிரத்து 877 தடுப்பூசிகள் (இரண்டு டோஸ் சேர்த்து) போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்