சென்னை: தமிழ்நாட்டின் பரந்த முதலீட்டுக்காக மே 5,6, 7ஆம் தேதிகளில் லண்டனில் தி ரைஸ் எமர்ஜ் - தமிழ் தொழில்முனைவோர் மற்றும் வல்லுநர்களின் உலகளாவிய உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் 'தி ரைஸ் குளோபல்' அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ், தி ரைஸ் யுஎஸ்ஏ தலைவர் பால சுவாமிநாதன், உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் ஆனந்த் கண்ணன் மற்றும் சதீஷ் வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
''லண்டனில் வரும் மே 5ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாடு, அனைத்து தமிழ் உச்சி மாநாடுகளின் தாய் என்று அழைக்கப்படுகிறது. 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களை மாநாட்டில் பங்கேற்க வைப்பதற்காக, 2020ஆம் ஆண்டு ஜூலை முதல், “தி ரைஸ் எமர்ஜ்” என அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தர வேண்டும் என்று, தமிழக அரசின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளர், டாக்டர் பி.சந்திரமோகன் ஐஏஎஸ் அதிகாரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சான் அகாடமி குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் எம்.டி. அர்ச்சனா பங்கேற்கிறார். லண்டனில் நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாடு நிச்சயமாகத் தமிழர்களின் பார்வையை மாற்றும். "உலகத் தமிழ் அமைப்பு (WTO-UK) மற்றும் தி ரைஸ் குளோபல் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்கள், உச்சி மாநாட்டைப் பலவற்றுடன் இணைந்து நடத்துகின்றன.
தமிழ்நாட்டிற்கு தற்போதைய முதலீடு மற்றும் வேலை உருவாக்கும் வேகத்தை வலுப்படுத்த வேண்டும். உலகம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட IT பயிற்சியாளர்களை வரவழைப்பதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வேகமாக வெளிவரும் 'டிஜிட்டல் உருமாற்ற சகாப்தத்தை' தமிழர்கள் முன்கூட்டியே பயன்படுத்திக் கொள்ளவும், தரவு சகாப்தத்தில் வழிகாட்டும் தமிழர்களுக்கான இரண்டாம் அடுக்கு தகவல் தொழில்நுட்பத் தலைமையாக இந்தப் பயிற்சியாளர்கள் செயல்படுவார்கள். கல்வி, தொழில்நுட்பத் தழுவல் மற்றும் வேலை உருவாக்கம். 'தமிழ்நாடு முதலில்' என்பது உச்சி மாநாட்டின் மற்றொரு பிரச்சாரமாகும். இது உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோரைத் தமிழ்நாட்டில் பரவலாக முதலீடு செய்ய ஊக்குவிக்கும்.
தமிழ்நாட்டின் தற்போதைய முதலீட்டாளர்-நட்பு அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளவும், 'தமிழகத்துக்கான டிரில்லியன் டாலர் பொருளாதாரம்' பற்றிய சமீபத்திய சொற்பொழிவுகளுக்கு ஆக்கப்பூர்வமான மற்றும் மாற்று அர்த்தங்களைத் தேட லண்டன் உச்சி மாநாடு உதவும். உலகளாவிய சுற்றுச்சூழல் முன்னுரிமைகள் மற்றும் சமூக நீதியின் தேவைகளுக்கு உந்துதல் அளித்து உலகளாவிய தமிழ் சிவில் சமூகத்தின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். மேலும் ஒரு சர்வதேச தமிழ் கூட்டுறவை நிறுவும் வகையில் இந்த மாநாடு அமையும்’’.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
உலகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
5 hours ago