68 தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி 10-வது நாளாக ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 68 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் 10-வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து கடந்த 18, 19-ம் தேதிகளில் மீன் பிடிக்கச் சென்ற 68 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வந் ததாகக் கூறி, இலங்கை கடற் படையினர் கைது செய்தனர். விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 20-ம் தேதி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இதையொட்டி கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 10-வது நாளாக நேற் றும் வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரங்களில் நங்கூரமிடப் பட்டுள்ளன. 3,000 பேர் மீன்பி டிக்கச் செல்லவில்லை. எப் போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடித்துறை முகம் கடந்த 10 நாட்களாக வெறிச்சோடிக் காணப்படுகிறது. மீனவர்களை விடுவிக்க நட வடிக்கை எடுக்காவிட்டால் வரும் 1-ம் தேதி ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

17 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

41 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

44 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்