கோயில் வருமானத்தில் மீன் சந்தை: ஹெச்.ராஜா கடும் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

‘‘கோயில் வருமானத்தில் மீன் சந்தை கட்டிடம் கட்டுவது கண்டிக்கத்தக்கது’’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கையில் வருகிற ஜன. 3-ம் தேதி விடுதலை போராட்ட வீரர் வேலுநாச்சியாரின் பிறந்த நாள் விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பங்கேற்க உள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் பாஜக மகளிரணி சார்பில் சிவகங்கையில் நடந்தது.

இதில் பங்கேற்ற பிறகு ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பக்தர்களிடம் மோசமாக நடந்து வருகின்றனர். திருச்செந்தூர் கோயிலில் பெண் பக்தரை அதிகாரி தாக்கியதை கண்டிக்கிறோம். மேலும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காத அத்துறை அமைச்சர் சேகர்பாபுவை முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கோயில் வருமானத்தை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் விதியை மீறி சென்னையில் மீன் சந்தை கட்டிடம் கட்ட பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அதைத் தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்