ராமேசுவரம் மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு: நாளை முதல் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

By கி.தனபாலன்

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து நாளை முதல் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று இரவு தனுஷ்கோடி இலங்கை நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

அப்போது அப்பகுதியில் மீன்படித்த ராமேசுவரத்தைச் சேர்ந்த தென்னரசு, லியோன் பிரிட்டோ, கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளை பிடித்து, அதிலிருந்த சக்தி, கோபி, குட்வின், ரகு, பிரபு, கருமலையான் உள்ளிட்ட 43 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனர். கைது செய்த மீனவர்களையும், படகுகளையும் யாழ்ப்பானம் அருகேயுள்ள மயிலாட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்கு மீனவர்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், மீனவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது கரோனா காரணமாக விடுதலை செய்யப்படலாம் என்ற தகவல் அங்கிருந்து மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா கூறும்போது, ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்கிறது. இதனால் ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 6 விசைப்படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைப்பிடித்துள்ளனர். இம்மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைபிடித்ததை கண்டித்தும், உடனடியாக விடுவிக்கக் கோரியும் நாளை முதல் ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் நாளை ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்