தலைமன்னார், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன், ராமேசுவரத்தை சேர்ந்த 28 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
பாம்பன் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகம், ராமேசுவரம் விசைப் படகு மீன்பிடி துறைமுகம் ஆகிய இடங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.
பாம்பன் மீனவர்கள் நேற்று அதிகாலை தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லையை கடந்து வந்து மீன்பிடித்ததாகக் கூறி இருதயராஜ், அமல்தாஸ், அந்தோனிசாமி ஆகியோருக்குச் சொந்தமான நாட்டுப்படகுகளைக் கைப்பற்றி அதில் இருந்த 23 பேரை சிறைபிடித்தனர். இவர்கள் தலை மன்னாரில் உள்ள காவல் நிலை யத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேபோல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சேத்தி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி அதில் இருந்த 5 மீனவர்களை கைது செய்து ஊர்காவல் துறையில் உள்ள மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள 28 மீனவர்களும் மன்னார், யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
கடந்த மார்ச் 3-ம் தேதி 8 மீனவர் கள், 6-ம் தேதி 29 மீனவர்கள், 10-ம் தேதி 4 மீனவர்கள் என கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்துள்ளனர்.
ஏற்கெனவே யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஆகிய சிறைகளில் 68 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ள னர். கடந்த ஓராண்டில் 81 விசைப் படகுகளை பறிமுதல் செய்துள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
12 mins ago
சினிமா
29 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
32 mins ago
சினிமா
38 mins ago
வணிகம்
20 mins ago
இந்தியா
32 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
சினிமா
33 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago