கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
கள் இறக்கவும், பருகவும் உலகில் எங்கும் தடையில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 29 ஆண்டுகளாக தடை நீடிக்கிறது. ‘புளிக்காத கள் சத்தான உணவு’ என்று 1937-ல் காந்தி கூறினார். ‘கள் ஒரு அருமருந்து என்பதால் கள்ளுக்கு கடையோ, தடையோ வேண்டாம்’ என்று 1963-ல் தந்தை பெரியார் வலியுறுத்தினார். அரசியல் கட்சியினருக்கு சவால் விடுகிறோம். நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளோம். கள்ளை உலகளவில் சந்தைப்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற, கள் (Neera) விற்பனையை அடுத்த மாதம் ஏப்ரல் 16-ம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் தொடங்கவுள்ளோம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கள்ளுக்கான தடையை நீக்க அறிவிப்பு இடம்பெறாவிட்டால் வேட்பாளரை தோற்கடிப்போம் இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
8 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago