மதுரையில் சாலையின் நடுவே ‘மெகா பள்ளம்’: போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்ப்பு

By செய்திப்பிரிவு

மதுரை மேலஅனுப்பானடியில் நேற்று திடீரென்று நடுரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

மாநகராட்சி முதன்மை பொறியாளர் அரசு தலைமையில் பொறியாளர்கள் கிருஷ்ணா, அலெக்ஸாண்டர் பள்ளத்தை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து பள்ளத்தை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதே பள்ளத்துக்கு அருகருகே இதற்கு முன்னர் இரண்டு முறை பெரிய பள்ளங்கள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தொடர் மழை மற்றும் மண் ஈரத்தன்மை யினால் பள்ளம் ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.

மழை பெய்து வரும் நிலையில் போதிய பராமரிப்பு இல்லாத சாலைகளில் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. மழைநீர் தேங்கும்போது பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்