திருச்சி மாவட்டம் அல்லித்துறை அருகே மல்லியம்பத்து பகுதியில் உள்ள செங்கதிர் சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(50). விவசாயியான இவர் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வந்தார். இவரதுமனைவி மைதிலி. இத்தம்பதிக்குஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த வாரம் மல்லியம்பத்து ஊராட்சித் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் செங்கதிர்சோலை கிராமத்தில் இருந்த மயான ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் தொடர்புடைய சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு கிடைக்காமல், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியதற்கு சிவக்குமார்தான் முக்கியக் காரணம் என நினைத்த ரியல் எஸ்டேட் கும்பல், சிவக்குமாரிடம் கடந்த சில நாட்களாக பிரச்சினை செய்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார், தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது அங்குவந்த சிலர், சிவக்குமாரை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த சிவக்குமாரை அவரது குடும்பத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சிவக்குமாரின் மனைவி மைதிலி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘எனது கணவரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த எங்கள் ஊரைச் சேர்ந்த பிரபாகரன், தீபக் மற்றும் அவர்களை கொலை செய்யத் தூண்டிய அந்தநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல், ரியல் எஸ்டேட்உரிமையாளர் ரவி முருகையா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் பிரபாகரன், தீபக், கதிர்வேல், ரவிமுருகையா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரபாகரன், தீபக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சிவக்குமாரின் உடல் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, திமுக ஒன்றியச் செயலாளர் கதிர்வேலை கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம் என கூறி சிவக்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago