நாளை எந்தந்த விரைவு ரயில் சேவைகள் நிறுத்தம்? :தெற்கு ரயில்வே நிர்வாகம்

By செய்திப்பிரிவு

பல்வேறு ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக நாளை விரைவு சேவைகளை ரத்து செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"வெளி மாநிலங்களை இணைக்கு இருப்பு பாதையில் பல்வேறு பராமரிப்பு பணி காரணமாக 25 நவம்பர் 2021 அன்று நாளை இரு மார்கத்திற்கான எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் எண் 15905 - கன்னியாகுமரி - திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் 25 நவம்பர் 2021 அன்று கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட இருந்த ரயில், ரயில் எண் 22648 - கொச்சுவேலி - கோர்பா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 25 நவம்பர் 2021 அன்று நாளை கொச்சுவேலியில் இருந்து காலை 06:15 மணிக்குப் புறப்பட இருந்த ரயில்,

ரயில் எண் 13352 - ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் 25 நவம்பர் 2021 அன்று ஆலப்புழாவில் இருந்து காலை 06:00 மணிக்குப் புறப்பட இருந்த ரயில். ரயில் எண் 22641 - திருவனந்தபுரம் - ஷாலிமார் இருவார விரைவு வண்டி 25 நவம்பர் 2021 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4.55 மணிக்குப் புறப்பட இருந்த ரயில்,

ரயில் எண் 22631 - மதுரை - பிகானேர் அனுவ்ரத் ஏசி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 25 நவம்பர் 2021 அன்று மதுரையில் இருந்து காலை 11:55 மணிக்குப் புறப்பட இருந்த ரயில் என குறிப்பிடப்பட்ட அணைத்து ரயில் சேவைகளுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.”

இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்