வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தை மா.சுப்பிரமணியன் நேற்றிரவு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மா. சுப்பிரமணியன் பேசும்போது, “முதல்முறையாக புனேவிலிருந்து சாலை மார்க்கமாக சுமார் 53 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.
வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். கிராமப் பகுதிகளாலும் இருந்தாலும், நகரப் பகுதிகளாக இருந்தாலும், யாரெல்லாம் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை போட்டுக் கொள்ளவில்லையோ அவர்களை கண்டறிய வேண்டும் என்றும், இரண்டாம் தவணை போட்டுக் கொள்ளாத 70,0000 பேரை கண்டறிய வேண்டும் என்று சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக் கால தொற்றைத் தடுக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 802 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,15,632. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,56,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,69,848.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
41 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago