புதுச்சேரி பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் ரவுடிகளை ஒடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக 'ஆப்ரேஷன் திரிசூல்' என்ற பெயரில் ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனைமேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெ னவே புதுச்சேரி ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, முதலியார் பேட்டை காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட சோத னையில் 14 ரவுடிகள் கைது செய் யப்பட்டனர். கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்குப்பட்ட கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்பி லோகேஸ் வரன் தலைமையில் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு நடத்தினர். மேலும் ரவுடிகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தனர். சில ரவுடிகளை காவல் நிலையம் அழைத்து வந்து குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.
இதேபோல் நேற்று அதி காலை வில்லியனூர் அடுத்த கரிக்கலாம்பாக்கம் மற்றும் கோர்க்காடு பகுதியில் சீனியர் எஸ்பி லோகேஸ்வரன் தலை மையில் ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர். இதில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காத நிலையில் 12 ரவுடிகளை காவல் நிலையம் அழைத்துச் சென்று எச்சரித்து அனுப்பினர். இந்த சோதனை தொடரும் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
18 mins ago
க்ரைம்
24 mins ago
க்ரைம்
33 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago