சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த திருநங்கை சுதா, அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தார். அதில், ‘பல ஆண்டுகளாக திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காக பணியாற்றி வருகிறேன். மற்ற மாநிலங்கள், நாடுகளில் உள்ள திருநங்கைகள்கூட தமிழகத்தில் வாழ விரும்புகின்றனர். அந்த அளவுக்கு தமிழகம் எல்லா வகையிலும் சிறந்து விளங்குகிறது. தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திருநங்கையான எனக்கு ஒரு தொகுதி ஒதுக்கித் தரவேண்டும்’ என்று கோரியுள்ளார்.
இது தொடர்பாக, சுதாவிடம் கேட்டபோது, ‘‘அதிமுகவில் விருப்ப மனு பெறப்பட்டபோது, மாநில அளவில் திருநங்கைகளை ஒருங்கிணைத்து அங்கீகாரம் பெறுவது தொடர்பாக பல அமைப்புகளுடன் பேசிக் கொண்டிருந்தோம். அதனால், அப்போது மனு அளிக்க முடியவில்லை. தற்போதுதான் தொகுதி ஒதுக்க கேட்டு மனு அளித்துள்ளேன். முதல்வர் வீட்டிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என நம்புகிறேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago