சமத்துவ மக்கள் கட்சியில் தலைவர் சரத்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர், தங்கள் ஆதரவாளர்களுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். சமக பொதுச் செயலாளராக இருந்த கரு.நாகராஜன், மகளிரணி துணைச் செயலாளராக இருந்த ஜெமிலா என பலரும் சரத்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இந்தச் சூழலில் பாஜக, சமக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சமக பொதுச் செயலாளராக இருந்து பாஜகவில் இணைந்துள்ள கரு.நாகராஜன் கூறும்போது, ‘‘பாஜகவுடன் சமக கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியில் இருந்தபோதே கூறியிருந்தேன். ஆனால், சரத்குமார் கேட்கவில்லை. இப்போது நாங்கள் இருக்கும் பாஜகவுடன் சமக கூட்டணி அமைத்துள்ளது. பழைய மனக்கசப்புகளை மறந்து செயல்படுவோம். பாஜக தலைமையின் வழிகாட்டுதல்படி சமக வெற்றிக்காக பிரச்சாரத்திலும் ஈடுபடுவோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
37 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago