நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை, சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. 316 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தை இனி தமிழர்தான் ஆளவேண்டும். தமிழர் அல்லாதவருக்கு இங்கு வாழும் உரிமை உண்டு. ஆனால், ஆள விடமாட்டோம். நாம் தமிழர் இயக்கம் ஆட்சிக்கு வந்தால் திருச்சியை தலைநகராக ஆக்குவோம். லஞ்சம், ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும். ஊழல் நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
தனித்துப் போட்டி என கூறிய விஜயகாந்த் திடீரென மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தது அவரது தடுமாற்றத்தைக் காட்டுகிறது. சரியான, தெளிவான முடிவெடுக்கத் தெரியாத விஜயகாந்த், எப்படி சிறந்த தலைவராக இருக்க முடியும்? முடிவெடுக்க தடுமாறும் விஜயகாந்த் ஒரு மாநிலத்தை எப்படி ஆட்சி செய்வார்?
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago