முதல் பட்டியலில் தமிழிசை இடம்பெறாதது ஏன்?

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இதில், மாநிலத் தலைவரான தமிழிசை சவுந்தர ராஜன் பெயர் இல்லை. பட்டியலை வெளியிட்டு நிருபர்களிடம் பேசிய கட்சியின் மத்திய தேர்தல் குழு செய லாளர் ஜே.பி.நட்டா, ‘‘தமிழிசை போட்டியிட 10-க்கும் அதிகமான தொகுதிகளை தொண்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதிலிருந்து விரைவில் அவருக்கான தொகுதி தேர்வு செய்யப்படும்’’ என்றார்.

கடந்த 2006 தேர்தலில் ராதாபுரம், 2011 தேர்தலில் சென்னை வேளச் சேரி, 2009 மக்களவைத் தேர்தலில் வட சென்னை ஆகிய தொகுதிகளில் தமிழிசை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். நாகர்கோவிலில் மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். பொன்.ராதா கிருஷ்ணனின் ஆதரவு இல்லாத தால் அங்கு வாய்ப்பு கிடைக்க வில்லை.

ராதாபுரம், வேளச்சேரி, விருகம் பாக்கம் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட அவர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது ஆதர வாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கோஷ்டி அரசியலால் நாகர்கோவி லிலும், ஜாதி அரசியலால் கோவையிலும் தமிழிசையால் போட்டியிட முடியவில்லை. ராதாபுரத்தில் போட்டியிட்டால் அவரால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முடியாது. எனவே, அவர் விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரி தொகுதியில் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

55 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்