புதுவையில் 2 பேர் கரோனாவுக்கு பலி: 55 பேருக்கு புதிதாக தொற்று; இதுவரை தடுப்பூசி போட்டுள்ளோர்10.82 லட்சம் பேர்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் இருவர் கரோனாவுக்கு பலியானார்கள். புதிதாக 55 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10. 82 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

புதுவையில் நேற்று 4 ஆயிரத்து 217 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் புதிதாக 55 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனைகளில் 94 பேரும், வீடுகளில் 396 பேரும் என புதுவை மாநிலத்தில் இப்போது 490 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர்.

புதுவையில் 55, காரைக்காலில் 17, ஏனாமில் 3, மாகேவில் 11 பேர் என 86 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

புதுவை அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த 83 வயது முதியவர், சாணரப்பேட்டையை சேர்ந்த 60 வயது ஆண் என 2 பேர் சிகிச்சை பலனின்றி கரோனாவால் இறந்தனர். இதனால் புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி போட்டுள்ளோர் விவரம்:

புதுச்சேரி முழுக்க சுமார் 7 லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் ஆக இதுவரை புதுச்சேரியில் 10 லட்சத்து 82 ஆயிரத்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்