மே 1 அரசு விடுமுறையை ரத்து செய்த புதுச்சேரி அரசு?- மத்திய அரசிடம் புகார்

By செ. ஞானபிரகாஷ்

நாடு முழுவதும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் மே 1 அரசு விடுமுறையை 2022-ம் ஆண்டுக்கான பட்டியலில் இருந்து புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி நடவடிக்கை கோரி மத்திய உள்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அரசு விடுமுறை நாட்கள் பட்டியலைப் புதுச்சேரி அரசு வெளியிடும். இச்சூழலில் 2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் உள்ள குறையைச் சுட்டிக்காட்டியும், சரிசெய்யக் கோரியும் மத்திய உள்துறைச் செயலர், ஆளுநர் ஆகியோருக்கு புதுவை ஏஐயூடியூசி செயலாளர் சிவக்குமார் மனு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களைப் புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி விடுமுறை அளிக்கவில்லை. புதுவை அரசின் இச்செயலைத் தொழிற்சங்கத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1-ம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதுவை அரசு 2022-ம் ஆண்டு விடுமுறை தினப் பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அன்று விடுமுறை அளிக்காதது தொழிலாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதற்குச் சான்றாகும். எனவே முந்தைய ஆண்டுகளைப் போல 2022-ம் ஆண்டிலும் மே 1-ம் தேதி தொழிலாளர் தின விடுமுறையை அறிவிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறைச் செயலர், ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

விளையாட்டு

11 mins ago

சினிமா

12 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

52 mins ago

இந்தியா

33 mins ago

கருத்துப் பேழை

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்