தமிழக ஊரக உள்ளாட்சி 2ஆம் கட்ட தேர்தலில் 73.27% வாக்குப்பதிவு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழக ஊரக உள்ளாட்சி 2ஆம் கட்டத் தேர்தலில் 73.27% வாக்குப்பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (அக்டோபர் 9) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

மொத்தம் 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், தேர்தலில் 73.27% வாக்குப்பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாவட்டவாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:

காஞ்சிபுரம்: 72%
செங்கல்பட்டு: 70%
விழுப்புரம்: 83.6%
கள்ளக்குறிச்சி: 82%
வேலூர்: 68%
ராணிப்பேட்டை: 75.3%
திருப்பத்தூர்: 73.5%
திருநெல்வேலி: 65%
தென்காசி: 70%

மொத்தம்: 73.27%

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

37 mins ago

சினிமா

50 mins ago

விளையாட்டு

56 mins ago

வலைஞர் பக்கம்

9 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

45 mins ago

மேலும்