சிறப்பாக பணியாற்றிய 18 போலீஸாருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் பரிசு வழங்கி பாராட்டினார்.
குற்றம் நடந்த சிறிது நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தது மற்றும் முன்னெச்சரிக்கையாக குற்றவாளிகளை கைது செய்தது என சென்னையில் 18 போலீஸார் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
சிறப்பாக பணிபுரிந்த வேப்பேரி காவல் நிலையத்தை சேர்ந்த எல்.மகேஸ்வரன், ஊர்க்காவல் படை காவலர் விக்னேஷ், செங்குன்றம் முதல்நிலை காவலர் எம்.உதயக்குமார், திருவொற்றியூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சி.துளசிலிங்கம், முதல்நிலை காவலர் எஸ்.செல்வம், பெரவள்ளூர் காவலர்கள் ஆர்.பழனியப்பன், எஸ்.ரமேஷ், ஊர்க்காவல் படை வீரர் அயத்தம் ஜார்ஜ், தண்டையார்பேட்டை தலைமைக் காவலர் ஆர்.ராஜேஷ் குமார், முதல்நிலை காவலர் ஏ.விஜயக்குமார், ஊர்க்காவல் படை வீரர்கள் பி.வி.தயானந்தன், பாலு, ஆர்.முருகவேல், கே.ஜெ.லோகேஸ்வரன், பெரியமேடு தலைமைக் காவலர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, நீலாங்கரை தலைமைக் காவலர் கே.முரளிதரன், அரும்பாக்கம் முதல்நிலைக் காவலர் ராமச்சந்திரன், ஊர்க்காவல் படை காவலர் கே.பாலகிருஷ்ணன் ஆகிய 18 போலீஸாரையும் சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் நேற்று வரவழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
கூடுதல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாயி, கே.சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
உலகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
8 hours ago