முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் ரங்கசாமி சரணாகதி: நாராயணசாமி விமர்சனம் 

By செ.ஞானபிரகாஷ்

முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள பாரதிய ஜனதாவிடம் ரங்கசாமி சரணாகதி அடைந்துள்ளார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று ஒரு வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை. மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

அரசியல் ரீதியாக என்.ஆர்.காங்கிரஸ் பாரதிய ஜனதாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. அலங்கோலமான ஆட்சியை ரங்கசாமி நடத்தி வருகிறார்.எது நடந்தாலும் பரவாயில்லை தனது முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள பாரதிய ஜனதாவிடம் சரணாகதி அடைந்துள்ளார்.

இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைப்படி பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் நடைபெற வேண்டும். அதனை அதிகாரிகள் திறம்பட நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

ஜோதிடம்

17 mins ago

வாழ்வியல்

22 mins ago

ஜோதிடம்

48 mins ago

க்ரைம்

38 mins ago

இந்தியா

52 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்