பாஜகவுடன் கூட்டணி என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி பேச்சு நடத்துவோம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தனித்து போட்டியிடப் போவதாக தேமுதிக அறிவித்த பிறகு அக்கட்சியுடன் இன்றுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இனி பாஜகவுடன் கூட்டணி என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்துவோம்.
இல்லையெனில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பது போன்ற தர்மசங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை இப்போது கூற முடியாது.
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்திப்போம். மக்கள் நலக் கூட்டணி உடைவது உறுதி. தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணி இருக்காது. இவ்வாறு கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
உலகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
6 hours ago
தமிழகம்
7 hours ago