`சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். அம்மாவின் கருணை பார்வைக்காக தாய்வீட்டு வாசலில் காத்திருக்கிறேன்’ என திருநெல்வேலி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் நேற்று தெரிவித்தார்.
திமுக திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்து வந்த கருப்பசாமி பாண்டியன், கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, கடந்த 14 மாதங்களுக்கு முன் கட்சி யில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் வேறு எந்தக் கட்சியிலும் இணையாமல் மவுன மாக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
அதிமுகவில் 1972 முதல் 1996 வரை எம்.ஜி.ஆர். மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் எனக்கு, கிராம கிளைச் செயலாளர் முதல் மாநில துணைச் செயலாளர் வரை பல்வேறு பதவிகளைத் தந்து அழகுபார்த்தனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்ததற் கான பலனை தற்போது அனு பவித்து வருகிறேன். திமுகவில் துரோகிகளும், முதுகில் குத்து பவர்களும் நிறைந்துள்ளனர். மு.க.ஸ்டாலினை அடுத்த முதல் வராக்க வேண்டும் என திமுக கூட்டத்தில் தெரிவித் தேன். ஸ்டாலின் முதல்வரா வதை கருணாநிதி விரும்ப வில்லை. அதனால் நான் ஓரங் கட்டப்பட்டேன். கட்சியில் எல் லோரும் என் மீது கல்லைத் தூக்கிப் போட்டனர். கடைசியாக ஸ்டாலினும் பெரிய கல்லை என் மீது போட்டுவிட்டார். என்னை கட்சியை விட்டே வெளியே போகச் செய்துவிட்டனர்.
தற்போது எல்லா புகழும் அம்மாவுக்கே என வந்துள்ளேன். அம்மாவின் கருணை பார்வைக் காக காத்திருக்கிறேன். தாய் வீட்டுக்கு போகும் பிள்ளையாக தாய் வீட்டு வாசலில் காத்திருக்கிறேன். அதிமுக வின் வெற்றிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா அனுமதி கொடுத்தால் அதிமுக வுக்காக பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளேன்.
கடந்த 60 நாட்களுக்கு முன்பு அதிமுகவில் என்னை மீண்டும் சேர்க்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டு கோள் விடுத்தேன். தற்போது முதல்வரிடம் இருந்து வரும் அழைப்புக்காக காத்திருக் கிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்’ என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
9 hours ago
ஓடிடி களம்
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
தமிழகம்
9 hours ago