நிலத்தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன் னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பூந்த மல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலி பிரச்சினை
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி தாலுகா கீழத்திருப்பாலக் குடியை சேர்ந்த விவசாயி க.தமிழ் செல்வன். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆசைத்தம்பி. இவர்கள் இருவர் வீட்டுக்கும் இடையே வேலி பிரச்சினை இருந்து வந்தது.
இது தொடர்பாக அவர் களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் உள்ளிக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த பொய்யா மொழி (முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) என்பவர் ஆசைத் தம்பிக்கு ஆதரவாக தமிழ்ச்செல் வன் வீட்டுக்குச் சென்று பேசி யுள்ளார். அப்போது, தமிழ்ச் செல்வனுக்கும், பொய்யாமொழிக் கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் நடைபெற்ற தாகவும், பொய்யாமொழியின் மேல் சட்டை கிழக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொய்யாமொழி கடும் ஆத் திரத்தில் இருந்துள்ளார். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 25-12-2005 அன்று நடைபெற்ற சம்பவத்தின்போது தமிழ்ச்செல்வனின் வலது கையை கொலையாளிகள் வெட்டி எடுத்துச் சென்று விட் டனர். சம்பவ இடத்தின் அருகே போலீஸார் நடத்திய சோதனையில், அங்கு நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைக் கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து, அவற்றை அழித்தனர்.
இந்த கொலை சம்பவத் தில் ஈடுபட்டதாக பொய்யா மொழி, அவரது உறவினரும் வழக்கறிஞருமான இளங் கோவன், ஆசைத்தம்பி, பொய்யா மொழியின் சகோதரர் செல்வம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப் பட்டது. மேலும், கொலை சம்பவத்தை தூண்டியதாகவும், கொலைக் குற்றத்துக்கு உறு துணையாக இருந்ததாகவும் கூறி பொய்யாமொழியின் தாயார் பத்மாவதி, மனைவி கயல்விழி, மாமனாரான மற்றொரு இளங் கோவன், வாகன ஓட்டுநர் அமு தரசன், வழக்கறிஞர் இளங் கோவனின் மனைவி கனிமொழி ஆகியோர் மீதும் பரவாக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், வழக்கறிஞர் இளங்கோவன், அமுதரசன் ஆகியோருக்கு கடந்த 30.9.2019 அன்று பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. மூன்று பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த பொய்யாமொழி கடந்த 23.11.2019 அன்று கைது செய்யப்பட்டார். பொய்யாமொழி மீதான வழக்கு பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு கள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 14 பொருட்களும், 50 ஆவணங் களும் தாக்கல் செய்யப்பட்டன.
ரூ. 1 லட்சம் அபராதம்
இந்த வழக்கில் நீதிபதி வேல் முருகன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். இதில் பொய்யாமொழி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையில், ரூ.50 ஆயிரத்தை இறந்த தமிழ்ச்செல்வனின் மனைவி மஞ்சுளாவுக்கு வழங்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செல்வம் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோர் இன்னும் தலைமறை வாக இருக்கின்றனர். மற்றொரு இளங்கோவன் இறந்து விட்டார். இந்த வழக்கிலும், ஏற்கெனவே இளங்கோவன், அமுதரசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை கிடைத்த வழக்கிலும் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
55 mins ago
சுற்றுச்சூழல்
57 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago