உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளில் மக்கள்நீதி மய்யம் தீவிரமாக ஈடுபட் டுள்ளது.
தமிழகத்தில் வேலூர், திருப் பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சி புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில்ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.
எனவே, அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மாவட்டம்தோறும் மாநில செயலாளர் நிலையிலான நிர்வாகி ஒருவர்நியமிக்கப்பட்டுள்ளார்.
தனித்துப் போட்டி
அவருடைய தலைமையில்வேட்பாளர்களைத் தேர்வு செய்துகட்சியின் தலைவர் கமல் ஹாசனுக்கு நிர்வாகிகள் பரிந்துரைக்க உள்ளனர். உள்ளாட்சிதேர்தலில் தனித்து போட்டியிட கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஒரிருநாளில் வெளியிடப்படும்.
வரும் 25-ம் தேதிக்குப் பிறகு பிரச்சாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார். தேர்தல் நடை பெறும் 9 மாவட்டங்களிலும் அவர் பிரச்சாரம் செய்வார்.
இவ்வாறு மநீம கட்சியின் நிர்வாகிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago