சிறுமியை திருமணம் செய்த வழக்கு: ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறை

By செய்திப்பிரிவு

சிறுமியைத் திருமணம் செய்த வழக்கில் ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் பெத்தனசாமி. மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவர் தனது 18 வயது பூர்த்தியடையாத 2-வது மகளை உத்தபாளையம் சீப்பலாக்கோட்டையில் உள்ள சகோதரி கருப்பம்மாளின் மகன் ராணுவ வீரரான பிரபுவுக்கு (33) 2015-ல் திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணம் முடிந்ததும் சிறுமியை பிரபு தான் பணிபுரிந்த ஜம்மு காஷ்மீருக்கு அழைத்துச் சென்றார். ஆந்திராவுக்கு இடமா றுதல் ஆனதும் அவரை ஆந்திராவுக்கு அழைத்து வந்தார். இந்நிலையில், ஆந்திரா விலிருந்து தப்பி மதுரைக்கு வந்த சிறுமி, முத்துப்பட்டியிலுள்ள முகாமில் தங்கி னார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ராணுவவீரர் பிரபு, அவரது தாயார் கருப்பம்மாள், சிறுமியின் தந்தை பெத்தனசாமி ஆகியோர் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வாளர் ஹேமமாலா வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தார்.

இந்த வழக்கை மதுரை போக்சோ வழக் குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா விசாரித்து, பிரபுவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை, பெத்தனசாமி, கருப்பம்மாளுக்கு தலா 2 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

51 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்