கும்பகோணம் அருகே தாயை கொலை செய்துவிட்டு, அருகி லேயே இரவு முழுவதும் படுத்து றங்கிய மனநிலை பாதிக்கப்பட்ட மகனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே உள்ள மாத்திகேட்டு பகுதியைச் சேர்ந் தவர் சரஸ்வதி அம்மாள்(70). இவரது, கணவர் சந்திரசேகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 5 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில், கடைசி மகன் பழனி(36) என்பவரைத் தவிர, மற்ற 6 பேருக்கும் திருமணமாகி வெவ் வேறு இடங்களில் வசித்து வரு கின்றனர்.
மருந்து விற்பனை பிரதிநிதி யாக வேலை செய்துவந்த பழனி, கடந்த ஓராண்டுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சற்று மனநிலை பாதிக்கப்பட்டது. அவரை தாய் சரஸ்வதிஅம்மாள் தனது அரவணைப்பிலேயே கவனித்து வந்துள்ளார். வீட்டை விட்டு அடிக்கடி வெளியே செல்ல முயலும் பழனியை தடுத்து நிறுத்தி, வெளியே செல்லாதவாறு பார்த்துக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற பழனியை, சரஸ்வதிஅம்மாள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படு கிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயின் கழுத்து மற்றும் வயிற்றில் குத்தியதால் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
பின்னர், பழனி தனது தாய் இறந்தது தெரியாமல், அருகிலேயே இரவு முழுவதும் படுத்து உறங்கியுள்ளார்.
இதையடுத்து, நேற்று காலை சரஸ்வதிஅம்மாளை பழனி எழுப்பியுள்ளார். அவர் எழுந்திருக்கா ததால், ரத்தம் படிந்த சட்டையுடன் அருகில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்று அம்மா தூக் கத்தில் இருந்து எழவில்லை என வெகுளித்தனமாக கூறியுள்ளார்.
பழனியின் சட்டையில் ரத்தக் கறையை பார்த்த அவரது சகோதரி தனது கணவருடன் சென்று பார்த்தபோது, அங்கு சரஸ்வதிஅம்மாள் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, பழனியின் சகோதரி மற்றும் உறவினர்கள் அளித்த தகவலின்பேரில், பட்டீஸ் வரம் போலீஸார் அங்கு வந்து சரஸ்வதி அம்மாளின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, பழனியை கைது செய்த போலீஸார், அவருக்கு மனநல மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago