மானாமதுரை அருகே காங்கிரஸ் கூட்டத்தில் சிதம்பரத்துடன் கட்சி நிர்வாகி கடும் வாக்குவாதம்

By செய்திப்பிரிவு

மானாமதுரை அருகே காங்கிரஸ் கூட் டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், நிர்வாகிக்கும் இடை யே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மானாமதுரை அருகே வெள்ளிக் குறிச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு பேசுகையில், மானாமதுரையில் காங்கிரஸ் வளர வில்லை. இதற்கு தற்போதுள்ள நிர்வா கிகள்தான் காரணம். அவர்களை மாற்ற வேண்டும். கட்சி கூட்டத்துக்கு அழைப் பதில்லை. பூத் கமிட்டியை முறையாக அமைக்கவில்லை என்றார்.

இதையடுத்து அவரைத் தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை. ஆனால் பாண்டிவேலு தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் கோபமடைந்த ப.சிதம்பரம் மேடையில் இருந்து இறங்கி வந்து, பாண்டிவேலுவை மேடையில் அமர்ந்து பேசுமாறு தெரிவி த்தார். மேலும் தான் பாண்டிவேலு இருக்கையில் அமர்வதாகக் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. அங்கிருந்த கட்சியினர் பாண்டிவேலுவை சமாதானப்படுத்தினர்.

இது குறித்து பாண்டிவேலு கூறு கையில், மானாமதுரை ஒன்றியத்தில் கட்சி வளரவில்லை. இதனால் கட்சி நிர்வாகிகளை மாற்றுங்கள் என்று கூறினேன். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் என்னை பேசக் கூடாது என்றார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் புகார் தெரிவிப்பேன் என் றேன். அவரும் கூறுங்கள் என்று சொன் னார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

8 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

43 mins ago

தொழில்நுட்பம்

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்