சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில்: உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் 477

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி கூட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் உறுப் பினர்கள் சார்பில் மொத்தம் 477 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி கூட் டத்தில், மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் நவம்பர் 2011 முதல் ஜனவரி 2016 வரை 53 மன்றக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவை 146 மணி, 49 நிமிடங்கள் நடை பெற்றுள்ளன.

இதில் நான் 59 மணி 36 நிமிடங்கள் பேசியிருக்கிறேன். இந்த கூட்டங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 139 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மன்றக் கூட்டங்களில் 97 உறுப் பினர்கள் 477 கேள்விகளை எழுப் பியுள்ளனர். அதில் 116-வது வார்டு உறுப்பினர் பி.சீனிவாசன் (அதிமுக) அதிகப்படியாக 24 கேள்விகளை கேட்டுள்ளார்.

91-வது வார்டு உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் (காங்கிரஸ்), 1-வது வார்டு உறுப்பினர் எ.தமிழரசி (அதிமுக), 80வது வார்டு உறுப்பினர் ஜி.ஆர்.சீனி வாசன் (அதிமுக) ஆகியோர் தலா 22 கேள்விகளை கேட்டுள்ளனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

வாழ்வியல்

16 mins ago

ஓடிடி களம்

26 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்