துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி- ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7 லட்சம் இழந்தது காரணமா?

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் வேலுச்சாமி (27), சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை பாதுகாப்புப் பணியில் இருந்தார்.

இவர் கடந்த 4-ம் தேதி இரவு 8.15 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகே இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முகம் முழுவதும் சிதைந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேலுச்சாமியின் பெற்றோர், நண்பர்களிடத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில், வேலுச்சாமி செல்போனில் ஆன்லைன் சீட்டாட்டம் விளையாடுவது தெரியவந்தது. அதில், ரூ.7 லட்சம் வரை பணத்தை இழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் சொந்த ஊரில் வீடு கட்ட வாங்கிய 4 லட்சம் ரூபாய் கடனை செலுத்த முடியாமல் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

சுற்றுலா

41 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்