விளையாடச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

By செய்திப்பிரிவு

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் விளையாடுவதற்காக சென்றபோது 5 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகரக் காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 5 வயதுச் சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த விக்னேஷ் (29) என்பவர் கடந்த சில நாட்களாகப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் W-17 செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்தார்.

W-17 செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ் என்பவரைப் பிடித்து விசாரணை செய்ததில், மேற்படி 5 வயதுச் சிறுமி விக்னேஷின் வீட்டில் விளையாடுவதற்காகச் சென்றபோது பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

அதன்பேரில், W-17 செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விக்னேஷைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விக்னேஷ், விசாரணைக்குப் பின்னர் இன்று (07.09.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்