கடலில் ஃபைபர் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை நேற்று முன்தினம் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, மீன்கள், வலைகளை பறித்துச் சென்றனர்.
நாகை கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தசெல்வக்குமார் என்பவரின் ஃபைபர் படகில், ரவீந்திரன்(28), கிருஷ்ணராஜ்(55), வேல்முருகன்(35), செல்வம் ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 கடல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 ஃபைபர் படகுகளில் ஆயுதங்களுடன் வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 9 பேர், மீனவர்களின் படகை சுற்றிவளைத்து, மீனவர்களைத் தாக்கி, 500 கிலோ மீன்கள், 2 செல்போன்கள் மற்றும் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு சென்றனர்.
இதில், காயமடைந்த 3 மீனவர்கள் நேற்று காலை நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதே கடற்கொள்ளையர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரின் ஃபைபர் படகிலும் ஏறி, அதிலிருந்த 4 மீனவர்களையும் ஆயுதங்களை காட்டி மிரட்டி, 450 வலைகளை பறித்துச் சென்றனர்.
மேலும், இந்த கடற்கொள்ளையர்களில் 6 பேர் 2 ஃபைபர் படகுகளில் சென்று, கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகை சுற்றி வளைத்து, படகில் இருந்த மீன்களை அள்ளிச் சென்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் மீனவர் கார்த்தி காயமடைந்தார். கரை திரும்பிய அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோரக் குழும போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, நாகை அரசு மருத்துவமனையில் கீச்சாங்குப்பம் மீனவர்களை எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸ் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
13 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
36 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கார்ட்டூன்
3 hours ago
இந்தியா
2 hours ago