மூப்பனார் 20-ம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் தெலங்கானா ஆளுநர் அஞ்சலி

By செய்திப்பிரிவு

மறைந்த மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 20-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், மூப்பனாரின் மகனும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசனும் தந்தையின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், அசோகன், மாவட்ட தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். தமாகா மாவட்டத் தலைவர்கள், மகளிரணி சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

25 secs ago

தமிழகம்

27 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

35 mins ago

வாழ்வியல்

54 mins ago

சுற்றுலா

57 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்