2015-ம் ஆண்டில் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட காரணம் என்ன?- பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் விவாதம்

By செய்திப்பிரிவு

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் குறித்து திமுக, அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையில் கடும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானிய கோரிக்கையின்போது நடைபெற்ற விவாதம்:

ஏ.பி.நந்தகுமார் (திமுக) : கடந்த2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததால் தான் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை. அவைக்கு தவறான தகவலைதரக்கூடாது. ஏரியின் உபரி நீர் வெளியேறியதால் தான் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது கூட மழையால் அதிகப்படியான நீர் சூழ்ந்து வருகிறது.

நந்தகுமார்: கடந்த ஆட்சியில் மழைநீர் கால்வாய்களை தூர்வாராததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: கடந்த ஆட்சி காலத்தில் சென்னையில் மழைநீர் கால்வாய்களை தூர்வாரி 15 நாட்கள் தேங்கிய நீரை, 5 நாட்கள் என்று குறைத்துள்ளோம்.

கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்) : செம்பரம்பாக்கம் ஏரி எனது  பெரும்பதூர் தொகுதியில் உள்ளது.கடந்த 2015-ம் ஆண்டு, செம்பரம்பாக்கம் ஏரியில் மழைநீர் நிரம்பிய நிலையில், 4 நாட்களாக அணையை திறக்க முதல்வரின் உத்தரவுக்காக காத்திருந்தனர். அதன்பின் தண்ணீரை ஒரே நேரத்தில் திறந்து விட்டதால் தான் இந்தநிலை ஏற்பட்டது.

பழனிசாமி: செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்ல; அதை சுற்றியுள்ள 100 ஏரிகளின் உபரிநீரும் சேர்ந்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: கடந்த 2015-ல் வெள்ள பாதிப்புக்கான காரணம் தொடர்பாக, மத்திய தணிக்கைத்துறை தலைவரின்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது அதை சட்டப்பேரவையில் வைக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது அறிக்கைதொடர்பாக தணிக்கைத் துறையிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் 2 ஆண்டுகள் கழித்தே அவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ஏரியை திறப்பதற்கான அனுமதியை பெற முதல்வரை தொடர்பு கொள்வதில் தாமதம்ஏற்பட்டதால் உடனடியாக திறக்கமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனிசாமி: மழைக்காலம் வரும்போது, ஏரி, குளங்களை திறப்பது குறித்து சூழலுக்கு தகுந்தபடி முடிவெடுத்து, அந்தந்த பொதுப்பணித் துறை பொறியாளர்களே திறப்பார்கள். அதற்கெல்லாம் அரசிடம் கேட்க மாட்டார்கள். ஆனால், பாசனத்துக்கு திறப்பது தொடர்பாக அரசின் உத்தரவை பெற்று திறப்பார்கள்.

நந்தகுமார்: கடந்த அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இவை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்