திமுகவின் 100 நாள் ஆட்சி என்பது இனிப்பு, கசப்பு, காரம் கலந்ததாக உள்ளது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி, நெல்லை மாவட்டத்திலுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று (ஆக. 20) விமானம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வந்தனர். தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் தரவேண்டும் என்பது மரபு. இருப்பினும், திமுக ஆட்சியின் இந்த 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் போன்றது.
இனிப்பு என்னவென்றால், மத்திய அரசுடன் இணைந்து இரண்டாம் அலை கரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. கசப்பு என்னவென்றால் 'ஒன்றிய அரசு' என ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை தேவையில்லாமல் பேசி வருகின்றனர். தமிழகத்தில் அநேக இடங்களில் பாஜக தொண்டர்களை குறிவைத்து கைது செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை என்பது முடித்து வைக்கப்பட்ட வழக்கு. அந்த வழக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வழக்கை மீண்டும் கையிலெடுப்பது போல தோன்றுகிறது. இதுபோலவே, அமலாக்கப்பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனைகளையும் செய்து வருகின்றனர்.
இதையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விட்டுவிட்டு, கரோனா மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து அதை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 54 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 2.5 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 mins ago
ஜோதிடம்
22 mins ago
ஜோதிடம்
35 mins ago
வாழ்வியல்
40 mins ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
56 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago