புதுச்சேரியில் 134 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 971 ஆக உள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக. 19) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,487 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 86, காரைக்கால் - 19, ஏனாம்- 6, மாஹே - 23 பேர் என மொத்தம் 134 (2.44 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 172 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 799 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 971 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் தொற்று பாதித்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,806 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது.

புதிதாக 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 899 (97.74 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 15 லட்சத்து 96 ஆயிரத்து 333 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 13 லட்சத்து 54 ஆயிரத்து 303 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்து 424 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்