அரக்கோணம் தடத்தில் நாளைபராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயணிகள் பாதுகாப்பு மற்றும் சீரான ரயில் இயக்கத்தை கருத்தில்கொண்டு, தண்டவாள பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் தடத்தில் வில்லிவாக்கம்-வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே நாளை (ஆக. 8) காலை 10.45 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யபட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மதியம் 1.55, திருவள்ளூர்-சென்னை சென்ட்ரல் காலை 11.50 ரயில்களின் சென்னை சென்ட்ரல்-ஆவடி இடையேயான சேவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் காலை 11.25, 11.45, 12.55, 1.30 மணி மற்றும் ஆவடிக்கு மதியம் 12.20 மணிக்குச் செல்லும் மின்சார ரயில்கள், அதே நேரத்தில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் காலை 10.30 மணி, 11.15 மணி, ஆவடி-சென்னை சென்ட்ரல் காலை 11 மணி ரயில்கள் பட்டாபிராம், இந்து கல்லூரி, அன்னனூர், திருமுல்லைவாயல், அம்பத்தூர், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
ஓடிடி களம்
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago