புதுச்சேரியில் புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 30) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,317 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 53 பேருக்கும், காரைக்காலில் 18 பேருக்கம், ஏனாமில் 5 பேருக்கும், மாஹேவில் 14 பேருக்கும் என 90 (1.69 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 189 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 790 பேரும் என மொத்தமாக 979 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் காரைக்காலைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 1,793 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. புதிதாக 82 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 43 (97.71 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 14 லட்சத்து 93 ஆயிரத்து 907 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 12 லட்சத்து 77 ஆயிரத்து 3 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 6 லட்சத்து 96 ஆயிரத்து 624 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள குழந்தைகளுக்கான கரோனா வார்டில் 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்கு மேற்பட்ட ஒரு குழந்தை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் ஒரு குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago