காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை: கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சேத்தியாத்தோப்பு அருகே வாக் கூர் பெரிய தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர், கடந்த 2017-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படித்து வந்தார். இவருக்கும் அப்பகுதி அரசுக்கல்லூரியில் பயின்று வந்த 22 வயது இளம்பெண் ஒருவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆசை வார்த்தைகள் கூறி அருண் அந்தப் பெண்ணிடம் பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் திருமணம் செய்ய மறுத்துள்ளார். அந்தப் பெண் தற் கொலைக்கு முயன்றார். இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் செய்தார்.

இந்த வழக்கு கடலூர் மகளிர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதிபாலகிருஷ்ணன் அருண்குமா ருக்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனை, ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, போலீஸார் அருண் குமாரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக க. செல்வப்பிரியா ஆஜரானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்