ஜோலார்பேட்டை அருகே கொட் டாறு தரைப்பாலம் பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய் யப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்களை எரிந்த நிலையில் காவல் துறையினர் நேற்று மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகம்மியம்பட்டு- காவேரிப்பட்டு ஊராட்சிகளுக்கு இடையே ஏரியையொட்டி கொட்டாறு தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலம் அருகே எரிந்த நிலையில் மனித உடல் பாகங்கள் இருப்பது குறித்து பொதுமக்கள், நேற்று காலை கிராம நிர்வாக அலுவலர் மேகலாவுக்கும், ஜோலார்பேட்டை காவல் நிலையத் துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சாந்தலிங்கம், ஜோலார் பேட்டை காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த உடல் பாகங்கள் இளம் பெண்ணின் கை மற்றும் கால் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, திருப் பத்தூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘கொலை செய்யப் பட்ட பெண் வெளியூரில் இருந்து இந்த வழியாக அழைத்து வரப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இப்பகுதியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதில் தகராறு ஏற்பட்டு எரித்துக்கொலை செய்யப் பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகிறது. இருந்தாலும், விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.
தனிப்படைகள் அமைப்பு
இந்த வழக்கில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சாந்தலிங்கம் (திருப்பத்தூர்)பழனிச்செல்வம்(வாணியம்பாடி) மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் லட்சுமி (ஜோலார் பேட்டை), அருண்குமார் (நாட்றாம் பள்ளி), மணிமாறன்(கந்திலி) ஆகி யோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து கொலையில் தொடர் புடைய நபர்களை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago