திமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகரிப்பு: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் ‘இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்' என்ற நிகழ்ச்சிக்கான பயிற்சி முகாம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய பாஜகவினர் அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று மக்களுடைய உள்ளம் கவர்ந்து, அவர்களை பாஜகவில் இணையும் விழா ஆக., 1-ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 11 பெண் அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆக., 3-ம் தேதி நாமக்கல் பகுதியில் நடைபெறும் தீரன் சின்னமலை நினைவு நாளில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லை. மின்சாரம் தடையின்றி கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு அதிகமாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டும், என்றார். கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் நாகராஜ், முத்துக்குமார், சேதுராமன், மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

32 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்